ENG vs IND: கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் சதம்: இந்தியா பொறுப்பான ஆட்டம்!

0

இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 300க்கும் அதிகமான ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தச் சாதனையை அடைய கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரின் சிறப்பான கூட்டணி முக்கிய பங்கு வகித்தது. இருவரும் தொடர்ந்து சதம் அடித்து சிறப்பாக விளையாடினர்.

போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 ரன்களையும், இங்கிலாந்து 465 ரன்களையும் எடுத்தன.

இந்தியா 6 ரன்கள் முன்னிலையில் இருந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. மூன்றாவது நாள் முடிவில் 2 விக்கெட்டிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. இன்று (ஜூன் 23) நான்காவது நாள் ஆட்டம் ஆரம்பமானது. அந்த நாளின் 7வது பந்திலேயே இந்திய கேப்டன் ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்தார். பிரைடன் கார்ஸ் வீசிய பந்து பேட்டில் பட்டு ஸ்டம்புகளை மோதி அவுட்டானது. பின்னர் ரிஷப் பந்த் களமிறங்கி, கே.எல்.ராகுலுடன் இணைந்து பொறுப்பாக விளையாடினார்.

முதலாவது செஷனில் மெதுவான முன்னேற்றம்:

நான்காவது நாள் ஆட்டத்தின் முதலாவது செஷனில் இந்தியா 24.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 63 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து பவுலர்கள் துல்லியமான லைன் மற்றும் லெங்க்தில் பந்து வீசியதோடு, சுற்றியுள்ள சூழ்நிலையும் அவர்களுக்கு சாதகமாக இருந்தது. ரன் ரேட் குறைவாக 2.60 ஆகவே இருந்தது.

வேகமான ஆட்டத்தில் பந்த்:

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பந்த் தனது ஆட்டத்தில் வேகத்தை அதிகரித்தார். 83 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். மறுபுறம், ராகுல் 202 பந்துகளில் சதம் அடைந்தார்.

அரை சதத்துக்குப் பிறகு, பந்த் வெறும் 21 பந்துகளில் 90 ரன்களை எட்டினார். அதன்பின் சதம் அடைவதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொண்டார். 130 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்தார். முதல் இன்னிங்ஸிலும் அவர் சதம் எடுத்திருந்தார். 140 பந்துகளில் 118 ரன்கள் எடுத்த பந்த், பஷீரின் சுழலில் விக்கெட்டை இழந்தார். 15 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடித்தார். இதன்மூலம் பந்த்–ராகுல் கூட்டணியாக 195 ரன்கள் சேர்க்கப்பட்டது. ராகுல் 137 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தற்போது, இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 86 ஓவர்களில் 6 விக்கெட்டுகளுக்கு 335 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியா 340 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. கருண் நாயர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here