இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா இரண்டாம் இன்னிங்ஸில் நிதானமாக ஆடி 364 ரன்கள் சேர்த்தது!

0

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா இரண்டாம் இன்னிங்ஸில் நிதானமாக ஆடி 364 ரன்கள் சேர்த்தது!

லீட்ஸில் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணி நிதானமான ஆட்டத்துடன் 364 ரன்கள் குவித்தது. கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் சிறப்பான சதங்களை விளாசினர்.

முதலில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுத்தது, அதற்குப் பதிலாக இங்கிலாந்து 465 ரன்கள் எடுத்தது. எனவே இந்தியா 6 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. மூன்றாவது நாள் முடிவில் இந்தியா 23.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்திருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், சாய் சுதர்சன் 30 ரன்களிலும் வெளியேறினர். ராகுல் 47 ரன்களிலும், ஷுப்மன் கில் 6 ரன்களுடன் ஆட்டத்தில் இருந்தனர்.

நான்காவது நாளில், ஷுப்மன் கில் 8 ரன்களில் வெளியேறினார். அவர் பிரைடன் கார்ஸின் பந்தில் கட் செய்ய முற்பட்டபோது, பந்து உள்விளிம்பில் பட்டு ஸ்டம்பை அடைந்தது. பந்த் களமிறங்கி ராகுலுடன் இணைந்து சிறப்பாக ஆடியது. மதிய உணவு இடைவேளையில் இந்தியா 48 ஓவர்களில் 3 விக்கெட்களுக்கு 153 ரன்கள் எடுத்தது.

அதன் பின் பந்த் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். ஜோஷ் டங்க் வீசிய 51 மற்றும் 57வது ஓவர்களில் பவுண்டரிகளை வீசியதோடு, ஷோயிப் பஷிர் பந்தில் சிக்ஸர்களையும் விளாசினார். ராகுல் 202 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் தனது 9வது சதத்தைவும், பந்த் 130 பந்துகளில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 7வது சதத்தைப் பதிவு செய்தார்.

பந்த் 140 பந்துகளில் 3 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 118 ரன்கள் எடுத்து, ஷோயிப் பஷிர் பந்தை லாங் ஆன் திசையில் விளாசும் போது ஸாக் கிராவ்லியிடம் கேட்ச் ஆனார். ராகுல் – பந்த் ஜோடி 195 ரன்கள் கூட்டாக குவித்தது. இதையடுத்து வந்த கருண் நாயர் 20 ரன்கள் எடுத்தார். ராகுல் தனது சதத்தை 247 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 137 ரன்களாக கொண்டுசென்று, கார்ஸின் பந்தில் போல்டானார்.

இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை 96 ஓவர்களில் 364 ரன்களில் முடித்தது.

தூய சாதனைகள்:

  • பந்தின் சாதனை: ஒரே டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை பந்த் படைத்தார் – 134 மற்றும் 118 ரன்கள்.
  • வரலாற்றுச் சாதனை: இந்தியா சார்பாக ஒரே டெஸ்ட் போட்டியில் 5 சதங்கள் பதிவு செய்யப்பட்ட முதல் முறை. (ஜெய்ஸ்வால், கில், பந்த் – 1st inngs; ராகுல், பந்த் – 2nd inngs)
  • பந்தின் தொடர்ச்சி: இங்கிலாந்தில் தனது கடைசி 5 இன்னிங்ஸ்களில் பந்த் 50க்கு மேல் ரன்கள் குவித்துள்ளார் (50, 146, 57, 134, 118).
  • 2 சதம் அடித்த 2வது விக்கெட் கீப்பர்: ஜிம்பாப்வே வீரர் ஆண்டி ஃபிளவருக்கு பிறகு இந்த சாதனையை நிகழ்த்தியவர் பந்த்.
  • தவறவிட்ட வாய்ப்புகள்: ராகுல் 54 ரன்களில் இருந்தபோது ஹாரிபுரூக் ஒரு கேட்ச்சை தவறினார். பந்த் 75 ரன்களில் இருந்தபோது ஸ்டோக்ஸ் பிடிக்க முயன்றும் தவறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here