ஜி7 நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை இந்தியா கடந்துவிடும் என ஒரு ஆய்வில் தகவல்

0

ஜி7 நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை இந்தியா கடந்துவிடும் என ஒரு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள சொத்து மேலாண்மை நிறுவனமான ஈக்விரஸ் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இதற்கான விபரங்கள் உள்ளன. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகில் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வரும் பொருளாதார நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா, ஜி7 நாடுகளை விட கட்டமைப்பு வசதிகளில் முன்னேற்றமான நிலைக்கு வந்துள்ளதாகவும், விரைவில் ஜி7 நாடுகளைக் கடந்துவிடும் என்ற நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பொருளாதார நிலைமைகள் இதுவரை அறியப்படாத வகையில் மாற்றமடைந்துள்ள நிலையில், இந்தியாவின் கொள்கை அடிப்படையிலான முதலீடுகள், கிராமப்புறங்களின் நுகர்வுப் பெருக்கம் மற்றும் கட்டமைப்பில் நடந்துவரும் மாற்றங்கள் ஆகியவை இந்த முன்னேற்றத்தை உறுதிப்படுத்துகின்றன என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈக்விரஸ் நிறுவனத்தின் உயர் நிர்வாகியாக செயல்படும் மிதேஷ் ஷா இதுகுறித்து கூறுகையில், “தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவின் வளர்ச்சி வீதம் குறைந்துள்ளது. ஆனால் இந்தியா, 2025 முதல் 2030 வரையிலான காலத்தில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 15 சதவீதத்திற்கும் அதிக பங்களிப்பை வழங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த பங்களிப்பு, ஜப்பான் (1 சதவீதத்துக்கும் குறைவானது) மற்றும் ஜெர்மனி (சுமார் 1.3 சதவீதம்) ஆகியவற்றைவிட பெரிதாகும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here