ரஜினியால் சினிமாவானது ஒய்.ஜி.மகேந்திரனின் ‘சாருகேசி’!

0

‘சாருகேசி’ படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

அருண்.ஆர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பா. விஜய் பாடல்களும் வசனமும் எழுதியுள்ளார். இசையை தேவா அமைத்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

விழாவில் பேசும் போது ஒய்.ஜி. மகேந்திரன் கூறியதாவது: “75வது வயதில் இவ்வாறான சிறப்பான கதாபாத்திரம் வழங்கியதற்காக கடவுளுக்கு நன்றி. இளம் இயக்குநர்களின் இடையே சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை அருமையாக இயக்கியுள்ளார். கத்தி, ரத்தம் இல்லாத தமிழ் திரைப்படமாக இது வருவது மகிழ்ச்சி. படம் முடிந்தவுடன் மனநிறைவுடன் வெளியே வரலாம்.

ரஜினிகாந்த் என்னை நீண்ட காலமாக ஆலோசகராக வழிநடத்தி வருகிறார். அவருக்கு என் உளமார்ந்த நன்றி. நானும் சுரேஷ் கிருஷ்ணாவும் பணத்தைவிட மக்களது அன்பை சம்பாதித்ததில்தான் பெருமை. படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறியதாவது: “ரஜினி சார் ‘இந்த நாடகத்தை படமாக எடுங்கள்’ என்று சொன்னதையடுத்து, தயாரிப்பாளர் அருண் ‘நீங்கள் இயக்கினால் தயாரிக்கிறேன்’ என உறுதி அளித்தார். நாடகத்தை திரைப்படமாக மாற்றுவது கடினமென்றாலும், ‘சாருகேசி’ நாடகத்தை பார்த்த உடனே 2 நாட்களில் திரைக்கதை எழுதி முடித்தேன். இதில் பாடல் பாடிய சங்கர் மகாதேவனுக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

படக்குழுவினர் அனைவரும் விழாவில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here