லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி பலமான நிலையை அடைந்துள்ளது. தொடக்க வீரர்களான பென் டக்கெட் மற்றும் சாக் கிராவ்லி இருவரும் சேர்ந்து 188 ரன்கள் கூட்டிணைப்பு அமைத்தனர்.
371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விரைந்து வருகிறது. 5-ம் நாள் ஆட்டத்தை அவர்கள் 6 ஓவர்களில் 21 ரன்கள் என்ற நிலைமையில் தொடங்கினர். ஒவ்வொரு செஷனையும் திட்டமிட்டு அணுகவேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடி வந்தனர். அந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக, முதல் செஷனில் 96 ரன்கள் குவித்தனர்.
மதிய உணவுக்கு பிறகு இங்கிலாந்து அணியின் ரன் ஓட்டம் வேகமடைந்தது. 40 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 177 ரன்கள் எடுக்கப்பட்டன. டக்கெட் 103 ரன்களிலும், கிராவ்லி 57 ரன்களிலும் விளையாடி வந்தனர். பின்னர் சிராஜ் பந்து வீசிய ஓவரில் மழையால் ஆட்டம் சில நிமிடங்கள் தடைபட்டது. இது இந்திய அணிக்கு ஓரளவு நிம்மதியை வழங்கியது.
பிரசித் கிருஷ்ணாவின் தாக்கம்:
மழை முடிந்ததும் விளையாட்டு தொடர்ந்தது. இரண்டாவது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசியபோது, 126 பந்துகளில் 65 ரன்கள் எடுத்த கிராவ்லி அவரது பந்தில் வெளியேறினார். கே.எல். ராகுல் ஸ்லிப் பகுதியில் சிறப்பாக கேட்ச் பிடித்து கிராவ்லியை வெளியேற்றினார். இதன் மூலம் 188 ரன்கள் ஓப்பனிங் கூட்டணிக்கு முடிவு காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அடுத்த ஓவரில் ஆலி போப்பை க்ளீன் போல்ட் செய்தார். இந்த dismissals இந்திய அணிக்கு முக்கிய திருப்புமுனையை உருவாக்குமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. டக்கெட் தற்போது 119 ரன்களுடன் களத்தில் உள்ளார்.