ஷிவதா மற்றும் ரம்யா பாண்டியன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘கயிலன்’. இதில் பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப் மற்றும் அனுபமா குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக அமீன் பணியாற்றியுள்ளார். இசையமைப்பாளர்களாக கார்த்திக் ஹர்ஷா மற்றும் ஹரி எஸ்.ஆர். இணைந்து இசையமைத்துள்ளனர். பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி.டி. அரசகுமார் தயாரித்துள்ள இப்படத்தை, அறிமுக இயக்குநராக அருள் அஜித் இயக்கியுள்ளார்.

ஜூலை 25 ஆம் தேதி வெளியீடு காண உள்ள இப்படத்தின் முன்னோட்ட விழா சென்னை நகரில் நடைபெற்றது. நிகழ்வில் படக்குழுவினருடன் கே. பாக்யராஜ், கவுரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் கே. ராஜன் மற்றும் தனஞ்செயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் அருள் அஜித் விழாவில் உரையாற்றும் போது கூறியதாவது: “‘கயிலன்’ என்பதற்கான அர்த்தம் தவறுகள் செய்யாதவர், நிலைத்த மனம் கொண்டவர் மற்றும் சாதிப்பவர் என்பதாகும். இது சங்ககாலத்திலிருந்தே பயன்பட்டு வரும் சொல். இந்தக் கதைக்கேற்ப இந்த பெயர் சிறந்ததாக இருந்ததால் அதனை தேர்வு செய்தோம். மேலும், கதையின் முடிவில் காண்போருக்கு ஒரு வித்தியாசமான அதிர்ச்சி காத்திருக்கிறது. அதற்கும் இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கிறது.

தொடக்கத்தில் தயாரிப்பாளர், ‘கதையின் வாயிலாக ஒரு நல்ல செய்தி தெரிவிக்க விரும்புகிறேன்’ என்றார். அதனடிப்படையில் இப்படத்தில் ஒரு சமூகக் கருத்தும் உள்ளது.

பொதுவாக த்ரில்லர் திரைப்படங்களில் ஆண்களின் தாக்கமே அதிகமாகக் காணப்படும். ஆனால், நாங்கள் பெண்கள் மையமாக இருக்கக்கூடிய கதாபாத்திரங்களை அமைக்க முடிவு செய்தோம். அதற்காக முதலில் நடிகை ஷிவதாவை தேர்ந்தெடுத்தோம். அவருடைய ‘நெடுஞ்சாலை’, ‘அதே கண்கள்’ போன்ற படங்களில் நடித்த பாங்கு என்னை கவர்ந்தது. இப்படியான திறமையான நடிகைகளைப் பெற்றால், ஒரு இயக்குநருக்கான வேலை மிக எளிதாகிவிடும்,” என கூறினார்.

Facebook Comments Box