ஜூலை 24, 25-ல் கோவை, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை ஏற்படும் வாய்ப்பு

ஜூலை 24, 25-ல் கோவை, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை ஏற்படும் வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் சில மலைப்பகுதிகளில் மற்றும் கடலோரங்களில் கடும் மழை, பலத்த காற்று ஆகியவை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேலாகவும், தென்னிந்தியாவின் மேலாகவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை மற்றும் நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஜூலை 24 மற்றும் 25-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேசமயம், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், அந்தமான் கடல், அரபிக்கடல், கோவா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, மாலத்தீவுப் பகுதிகள் ஆகியவற்றில் இன்று மற்றும் நாளை மணிக்கு அதிகபட்சம் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும்,

இதனால், மீனவர்கள் இந்த கடலோரங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான முன்னெச்சரிக்கைகளை மாநில நிர்வாகம் மேற்கொள்ள வேண்டியதாய் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Facebook Comments Box