அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை கிடையாதா?” – தமிழிசை கேள்வி

“அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை கிடையாதா?” – தமிழிசை கேள்வி

முதல்வர் மு.ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஏன் செல்லவில்லை? அங்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை நடைபெறவில்லை என்றே தெரியுமா?” என தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவி தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடிக்கு புறப்படும் முன்னர், சென்னை விமான நிலையத்தில் இன்று பேசிய தமிழிசை, “தமிழக மக்கள் நலனில் முதலமைச்சர் ஸ்டாலினை விட பிரதமர் மோடியே அதிக கவனம் செலுத்துகிறார். வீடு வீடாக சென்று ‘பாஜக நிதி வழங்கவில்லை’ என்று கூறுங்கள் என்று ஸ்டாலின் சொல்கிறார். அதே போல, மோடி ரூ.4,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கியதைப்பற்றியும் வீடுகளுக்குள் சென்று கூறுங்கள்.

முதல்வர் ஸ்டாலின் விரைவில் முழுமையாக நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர் தனியார் மருத்துவமனையில் இருந்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ எனும் தலைப்பில் வீடியோ காலில் பேசுகிறார். அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லாததற்குக் காரணம் என்ன? அங்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை கிடையாதா? அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுகிறார். அரசியல் தலைவர்கள் பலரும் வெளிநாடு அல்லது தனியார் மருத்துவமனைகளை நாடுகிறார்கள்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி எடுத்துக்கொண்டார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு ஒரே அளவிலான சேவையே கிடைக்கவேண்டும் என்பதே ஆட்சி மைய நோக்கமாக இருக்கவேண்டும்.

‘கிட்னி திருட்டு இல்லை; முறைகேடே நடந்துள்ளது’ என சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகிறார். வீட்டுக்குள் புகுந்து பொருட்கள் திருடப்படும் போது, அதை திருட்டு அல்ல, முறைகேடு எனச் சொல்வார்களா? இதுபோன்ற சம்பவங்களில் ஏழை மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் அறுவை சிகிச்சை உரிமத்தை ரத்து செய்வது மட்டுமால் போதுமா? இதில் திமுகவினரும் ஈடுபட்டுள்ளனர். பாலியல் தொந்தரவு, கொலை, கொள்ளை, கிட்னி திருட்டு என அனைத்திலும் திமுகவினர் தொடர்புடையதாக இருக்கின்றனர் என்பது கவலைக்கிடமானது.

பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் நடக்கிறது. இறந்தவர்களின் பெயர்களே அதிலிருந்து அகற்றப்படுகின்றன. இதில் திமுக எதற்காக பதட்டமடைய வேண்டும்? தமிழகத்திலும் தவறான விவரங்களை நீக்கி, துல்லியமான வாக்களர் பட்டியலை உருவாக்க வேண்டியது அவசியம்” என்றார் தமிழிசை.

Facebook Comments Box