சமூக நீதி விடுதி எனும் பெயர் மீது கருப்பு மை பூசி கூடலூர் அருகே போராட்டம்

சமூக நீதி விடுதி எனும் பெயர் மீது கருப்பு மை பூசி கூடலூர் அருகே போராட்டம்

கூடலூர் அருகே “சமூக நீதி விடுதி” என்ற பெயரை கருப்பு மையால் அழித்து, பார்வர்டு பிளாக் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

தமிழக அரசு, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்துறையில் இணைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதனுடன், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளுக்கு “சமூகநல விடுதிகள்” என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன் ஒரு பகுதியாக, “கள்ளர் விடுதிகள்” என அழைக்கப்பட்டவைகளுக்கு “சமூக நீதி விடுதி” என புதிய பெயர் வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்தும், தேனி மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியான எதிர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான ஒரு கட்டமாக, கூடலூர் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டி பகுதியில் அமைந்துள்ள விடுதி முன்பாக கம்பம் நகர மற்றும் ஒன்றிய அளவிலான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், விடுதியில் எழுதப்பட்டிருந்த “சமூக நீதி விடுதி” என்ற வார்த்தைகளை கருப்பு மையால் அழித்தனர். அதனைத் தொடர்ந்து, அரசின் இந்த அறிவிப்புகளை திரும்பப்பெறக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

அதே கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் தேவர் சமுதாய இளைஞரணி சார்பிலும் மறுப்புப் பேரணியும் நடைபெற்றது.

Facebook Comments Box