மே.இ.தீவுகளை வீழ்த்திய பாகிஸ்தான் – டி20 தொடரில் 1-0 முன்னிலை

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணமாகச் சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது ஆட்டத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. லாடர்கில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கில் இறங்கி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது.

சைம் அயூப் 57 ரன்களும், ஃபகர் சமான் 28 ரன்களும் எடுத்தனர். மே.இ.தீவுகள் அணிக்காக ஷமர் ஜோசப் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

179 ரன்கள் எடுத்தாலே வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜான்சன் சார்லஸ் 35, ஜூவெல் ஆண்ட்ரூ 35 மற்றும் ஜேசன் ஹோல்டர் 30 ரன்கள் சேர்த்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளும், சைம் அயூப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.


மக்காவ் ஓபன் பாட்மிண்டன்: அரை இறுதிக்குள் நுழைந்த லக் ஷயா சென் மற்றும் தருண் மன்னேபள்ளி

சீனாவின் மக்காவ் நகரில் நடைபெற்று வரும் மக்காவ் ஓபன் பாட்மிண்டன் தொடரில், இந்தியாவின் லக் ஷயா செனும், தருண் மன்னேபள்ளியும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில், தருண் மன்னேபள்ளி (உலக தரவரிசை: 47) சீனாவின் ஹூ ஹி (தரவரிசை: 87) எனும் வீரரை 21-12, 13-21, 21-18 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில், இந்தியாவின் லக் ஷயா சென், சீனாவின் ஜுவான் சென் ஹூவை 21-14, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி கொண்டு அரை இறுதிக்கு அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 1 மணி 3 நிமிடங்கள் நீடித்தது.

Facebook Comments Box