மணிரத்னத்தின் இயக்கத்தில் துருவ் விக்ரம்!
மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படத்தில், துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
‘தக் லைஃப்’ படத்துக்குப் பிறகு, மணிரத்னம் ஒரு காதல் கதையை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ‘தக் லைஃப்’ திரைப்படம் வெற்றியடையாத காரணத்தால், தனது அடுத்த படத்தின் திரைக்கதையை மேலும் மேம்படுத்தியுள்ளார் மணிரத்னம். இப்போது, படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்.
காதலுடன் சேர்ந்த அதிரடி கலந்த கதை இது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் ஹீரோவாக துருவ் விக்ரம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கதாநாயகியாக ருக்மணி வசந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இசை அமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணியாற்றவுள்ளார். தற்போது இந்தப் படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
தொடக்கத்தில் இந்தக் கதையை புதிய கதாப்பாத்திரங்களுடன் இயக்க திட்டமிட்டிருந்தார். பின்னர் சிம்புவை வைத்து இயக்க யோசித்தார். ஆனால் ‘தக் லைஃப்’ படம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, துருவ் விக்ரமுடன் இப்படம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விக்ரமுடன் ‘ராவணன்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களை இயக்கியிருந்த மணிரத்னம், இப்போது அவரது மகனை மையமாகக் கொண்டு புதிய படத்துக்குத் திட்டமிட்டுள்ளார்.