சிவகங்கை பின்னணியில் உருவாகும் ‘சிறை’

‘மாஸ்டர்’, ‘லியோ’ (விஜய்), ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ (விஜய் சேதுபதி) உள்ளிட்ட பல படங்களை தயாரித்த செவன் ஸ்கீரின் ஸ்டூடியோவின் எஸ். எஸ். லலித்குமார், இப்போது தனது மகன் எல். கே. அக்‌ஷய்குமார் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘சிறை’ என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, அனந்தா மற்றும் அனிஷ்மா நாயகிகளாக நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கும் இந்தப் படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு மாதேஷ் மாணிக்கம்.

‘டாணாக்காரன்’ பட இயக்குநரும் நடிகருமான தமிழ், தனது சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதையை எழுதியுள்ளார். ஒரு போலீஸாரும் விசாரணைக் கைதியும் மேற்கொள்ளும் பயணமே கதையின் மையம். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படம் சிவகங்கை பின்னணியில் நடக்கிறது. அக்‌ஷய்குமார், இப்படத்துக்காக சிறப்பு நடிப்புப் பயிற்சி பெற்றுள்ளார்.

படத்தின் முதல் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று வெளியிட்டார்.

Facebook Comments Box