சென்னையில் இன்று முதல் வாலிபால் போட்டி தொடக்கம்
சென்னையில் இன்று முதல் 13ஆம் தேதி வரை, சான் அகாடமி ஏற்பாட்டில் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கிடையிலான 7வது வாலிபால் போட்டி நடைபெறுகிறது.
ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டிகள், எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடத்தப்படுகின்றன. இன்று காலை 11 மணிக்கு தொடக்க விழா நடைபெறவுள்ளது. இந்த போட்டியை சான் அகாடமி குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ் மற்றும் சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் இணைந்து நடத்துகின்றன.
தொடக்க விழாவில் சான் மீடியா நிறுவன நிர்வாக இயக்குநரும், தமிழ்நாடு வாலிபால் சங்கத் தலைவருமான ஆர். அர்ஜுன் துரை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொது மேலாளர் எல். சுஜாதா, சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் துறையின் முன்னாள் உதவி ஆணையர் வி. மனோகரன், சர்வதேச வாலிபால் வீரர் பி. சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.