தேர்தல் ஆணையம் நோக்கி போராட்டம்; ராகுல் காந்தி உட்பட இந்திய கூட்டணி எம்.பிக்கள் கைது

வாக்காளர் பட்டியல் மோசடிக்காக விசாரணை கோரியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்தும், டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இந்திய கூட்டணி எம்.பிக்கள் பேரணியாக சென்ற போது டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட இந்திய கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகர்த்வாரம் பகுதியில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு அமைதியான பேரணியாகப் புறப்பட்டனர். இந்தப் பேரணியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் எம்.பி மஹுவா மொய்த்ரா மற்றும் பிற இந்திய கூட்டணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தை விட்டு செல்லும் போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் பாதுகாப்பு காரணமாக, இந்திய கூட்டணி மூத்த தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் மற்றும் என்சிபி தலைவர் சரத் பவார் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தை தொடர்கின்றனர். பேரணியின் போது திரிணமூல் எம்.பி மிதாலி பாக் மயக்கமடைந்தார்.

பேரணியில் பேசின காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், “தேர்தல் ஆணையத்திற்கு எங்கள் கோரிக்கையை தெளிவாக முன்வைக்கிறோம். நாங்கள் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு அமைதியான பேரணியை நடத்தி வருகிறோம். பிஹார் சிறப்பு திருத்தம் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு ஒரு குறிப்பாணை வழங்க விரும்புகிறோம். இப்போது தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு செல்வதற்கு கூட அனுமதி இல்லை. நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்னால் ஜனநாயகம் பாதிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

Facebook Comments Box