‘சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அதை அழிப்போம்’ – பாக். ராணுவ தளபதி பேச்சு

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அதை அழித்துவிடுவோம் என்றும், சிந்து நதி நீர் உரிமைகளை எந்த விலையையும் கொடுத்தும் பாதுகாப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு இரண்டாவது முறையாக அமெரிக்காவுக்கு பயணம் செய்த அசிம் முனீர், வாஷிங்டன் டி.சி-வில், டம்பாவில் பாகிஸ்தானின் கவுரவ தூதர் அட்னான் ஆசாத் நடத்திய கருப்பு-டை இரவு விருந்தில் கலந்து கொண்டார். அங்கு அவர், “சிந்து நதி இந்தியர்களின் குடும்ப சொத்து அல்ல. இந்தியா சிந்து ஆற்றை தடுக்கும் திட்டங்களை நிறுத்துவதற்கு எங்களுக்கு தேவையான சக்தி உள்ளது. இந்தியா சிந்து நதியில் அணை கட்டினால், பாகிஸ்தான் தனது நீர் உரிமைகளை எந்த விலை கொடுத்தும் பாதுகாப்பும். நாம் அந்த அணை கட்டுவதை காத்திருக்கிறோம்; அது கட்டப்பட்டவுடன் அதை அழிப்போம்” என்றார்.

மேலும், காஷ்மீர் பாகிஸ்தானின் ‘கழுத்து நரம்பு’ என அவர் குறிப்பிட்டார். காஷ்மீர் இந்தியாவின் உள் விவகாரம் அல்ல; அது தீர்க்கப்படாத சர்வதேச பிரச்சினை என்றும், “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியாவின் பாகிஸ்தானின் இறையாண்மையை மீறுவதாக அவர் விமர்சனம் செய்தார்.

இணையதள செய்தி தி டான் இன்றைய செய்தியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றங்களை குறைப்பதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பங்களிப்புக்கு முனீர் நன்றியைக் கூறியுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box