86 நாடுகளில் புதிய வகை கொரோனா பாதிப்பு… உலக சுகாதார நிறுவனம் தகவல்

0

 

வேகமாக பரவும் தன்மை கொண்ட புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு உலகின் 86 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளும் பிரிட்டன் உடனான விமானப் போக்குவரத்துக்கு தற்காலிகத் தடை விதித்தன. மேலும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரிட்டன் பயணிகள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். 
இந்நிலையில் உலகம் முழுவதும் 86 நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 
மேலும் புதிய வகை கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார நிறுவனம் பிரிட்டனில் டிசம்பர் மாதம் 63 சதவிகிதமாக இருந்த தொற்று பாதிப்பு ஜனவரி மாதம் 90 சதவிகிதமாக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.
அதேசமயம், கூடுதலாக உருமாற்றம் அடைந்த மேலும் 2 புதிய வகை கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here