இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,831 பேருக்கு கொரோனா

0

 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,831 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,08,38,194-ஆக அதிகரித்தது. 
 
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 11,904 போ் குணமடைந்தனா். இதனால், கொரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,05,34,505-ஆக அதிகரித்தது. கொரோனா தொற்றுக்கு மேலும் 84 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,55,080-ஆக அதிகரித்துள்ளது. 
கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பிறகு தினசரி உயிரிழப்பு மீண்டும் குறைந்துள்ளது. நாடு முழுவதும் 1,48,609 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 20.19 கோடி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
இதில், நேற்று மட்டும் 5,32,236 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேசமயம், நாடு முழுவதும் இதுவரை 58 லட்சத்துக்கும் அதிகமானவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here