தீ இல்லாமல் பொங்கல் பானையில் பொங்கல் கிண்டும் ஸ்டாலின் – ஏன் இந்த மானங்கெட்ட புழப்பு…..?

0
பண்டிகைகள் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், அரசியல் தலைவர்கள் அதற்கு வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டாடப்படுவது வழக்கமாகும். ஆனால் தி.மு.க’வில் மட்டும் கொண்டாடும் பண்டிகையையும் தேர்தல் பிரச்சாரம் போல் நாடகத்தனமாக வடிவமைத்து அதை சினிமா சூட்டிங் எடுப்பது போல் ‘பாவ்லா’ செய்வது நடக்கும் அந்த வகையில் அடுப்பில் நெருப்பில்லாமல் பொங்கல் கிண்டி கொண்டாடினார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
 
தி.மு.க சார்பில் திருவள்ளூர் மாவட்டம் நத்தம் ஊராட்சியில் உழவர் பெருமக்களுடன் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்க்கா ஸ்டாலின் ஆகியோர் அங்கிருந்த பொங்கல் பானையில் பொங்கலை கிண்டுவது போல் பாசாங்கு செய்யும் புகைப்படத்தை தி.மு.க சார்பில் வெளியிட்டனர்.
அந்த புகைப்படத்தில் பொங்கும் பொங்கல் பானையில் நெருப்பில்லை. மேலும் காலில் செருப்புடன் பொங்கலை கிண்டும் ஒரே தமிழக அரசியல் தலைவர் ஸ்டாலினாகதான் இருப்பார். அப்படி ஒரு புகைப்படம் அது! இணையதறத்தில் வழக்கம்போல் நெடிசன்களால் கிண்டல் செய்யப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
 
பிரச்சாரத்தில் நாடகம், கருத்துக்களை கூறுவதில் நாடகம், கூட்டணியில் நாடகம், மக்களிடம் நாடகம், எதிர்க்கட்சிகளிடம் நாடகம், கூட்டணி கட்சிகளிடம் நாடகம் என தி.மு.க’வின் நாடகத்தனத்திற்கு மத்தியில் கிண்டும் பொங்கல் பானையும் நாடகம்தான். தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்துமே இப்படி நாடகத்தனம்தான் போலும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here