பிலிப்பைன்ஸுக்கு எதிராக போர் தொடங்கினால் நிச்சயம் பதிலடி கொடுப்போம் என சீனாவுக்கு அந்நாட்டு அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர் படகு மூலம் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
சீனாவின் தாக்குதலில் பிலிப்பைன்ஸ் வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்நிலையில், பிலிப்பைன்ஸ் எந்த நாட்டுக்கு எதிராகவும் போர் தொடுக்காது என்றும், ஆனால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.