லுங்கி ந்கிடி பந்துவீச்சில் சிறப்பு: இரண்டாவது ஒருநாள் ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணி தொடரை 2–0 என கைப்பற்றியது.
குயின்ஸ்லாந்தின் மெக்கே நகரிலுள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவர்களில் 277 ரன்கள் சேர்த்து அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.
அதிக ரன்கள் எடுத்தவர் மேத்யூ பிரீட்ஸ்கே – 78 பந்துகளில் 2 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உடன் 88 ரன்கள். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 87 பந்துகளில் 1 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் சேர்த்தார்.
டோனி டி ஸோர்ஸி 38, வியான் முல்டர் 26, கேசவ் மகாராஜ் 22 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய பக்கம் ஆடம் ஸாம்பா 3 விக்கெட் எடுத்தார். சேவியர் பார்ட்லெட், நேதன் எலிஸ், மார்னஷ் லபுஷேன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
278 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி 37.4 ஓவர்களில் 193 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது. விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஷ் – 74 பந்துகளில் 2 சிக்சர்கள், 10 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் விளாசினார்.
டிராவிஸ் ஹெட் 6, கேப்டன் மிட்செல் மார்ஷ் 18, கேமரூன் கிரீன் 35, மார்னஷ் லபுஷேன் 3, அலெக்ஸ் கேரி 13, ஆரோன் ஹார்டி 10 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க பக்கம் லுங்கி ந்கிடி 5 விக்கெட் வீழ்த்தினார். நந்த்ரே பர்கர், செனுரன் முத்துசாமி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகன் விருது லுங்கி ந்கிடிக்கு வழங்கப்பட்டது. 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2–0 என கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 5-வது முறையாக தொடர்ந்து கைப்பற்றியுள்ளது.
கெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கடைசி மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் நாளை (24ஆம் தேதி) இதே மைதானத்தில் நடைபெறுகிறது.