புஜாராவின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்கள் | நினைவுகூரல்

ராகுல் திராவிட் என்னும் இந்தியப் பெருஞ்சுவர் ஓய்வு பெற்ற பிறகே, இந்திய அணியில் 2010-ம் ஆண்டு நுழைந்த செடேஷ்வர் புஜாரா, ராகுல் திராவிட்டின் அனைத்து திறமைகளையும் குறிப்பாக டெஸ்ட் போட்டித் திறமைகளை 3ம் நிலையில் அப்படியே கொண்டு வந்தார். ராகுல் திராவிட் போன பிறகு, அவரைப் போலவே இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம் தான் புஜாரா.

இவரை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் கொஞ்சம் கண்ணியமாக நடத்தி, அவருக்குரிய மரியாதையுடன் பிரியாவிடை கொடுக்கலாம். கோலி என்னும் மாவீரனும் இப்படித்தான் கடைசி பிரியாவிடையை மைதானத்தில் கொடுக்காமலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது, இது பெரிய வருத்தம்தான். எப்படி திராவிட், சச்சின், லஷ்மண் இந்திய நடுவரிசையை ஒரு காலத்தில் தாங்கிப் பிடித்தார்களோ, இவர்கள் ஓய்வுக்குப் பிறகு புஜாரா, கோலி, ரஹானே என்று கூறலாம்.

103 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய புஜாரா 7,195 ரன்களை 43.60 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 19 சதங்களையும் 35 அரைசதங்களையும் எடுத்ததோடு, தன் டெஸ்ட் வாழ்க்கையில் 863 பவுண்டரிகள், 16 சிக்சர்களை விளாசியதோடு 66 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.

லிஸ்ட் ஏ என்று சொல்லப்படும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 5,579 ரன்களை 57.01 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் 16 சதங்கள், 34 அரைசதங்கள் அடங்கும். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இவருக்கு 5 போட்டிகளுக்கு மேல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். முதல் இன்னிங்ஸில் 4 ரன்களில் மிட்செல் ஜான்சனின் பந்து தரையோடு தரையாகத் தாழ்வாக வந்ததில் எல்.பி. ஆனார், அதிர்ச்சிகரமான பந்து. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்கொண்டு இந்திய அணி ஆடிய போது, 89 பந்துகளில் 7 பவுண்டரிகள் உடன் 72 ரன்களை விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். அப்போதே ஒரு நல்ல பேட்டர் இந்திய அணிக்குக் கிடைத்ததாக இயன் சாப்பல் வர்ணனையில் தெரிவித்தார்.

புஜாராவின் கடைசி டெஸ்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக ஆடியது. இதில் முதல் இன்னிங்சில் 14, இரண்டாவது இன்னிங்சில் 27 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.

ஆடிய சிறந்த இன்னிங்ஸ்கள்:

  • முதல் அறிமுகப் போட்டியில் பெங்களூருவில் 2வது இன்னிங்ஸில் எடுத்த 72 ரன்கள் அற்புதமானது. ராகுல் திராவிட்டின் அதே 3ம் நிலையில் இறங்கினார். ஸ்பின், வேகப்பந்து வீச்சை சிறந்த முறையில் ஆடியது, இந்திய அணிக்கு உறுதியான வீரர் ஒருவர் கிடைத்ததை அறிவித்தது.
  • ஜொஹான்னஸ்பர்க் 153 ரன்கள்: தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி 2013-ல் சென்ற போது, டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல், வெர்னன் பிலாண்டர் அடங்கிய வேகப்பந்து வீச்சிற்கு எதிராக, கிரீன் டாப் பிட்சில் 2வது இன்னிங்ஸில் புஜாரா 202 ரன்களை எடுத்தார். முரளி விஜய்யுடன் 70 ரன்களைச் சேர்த்து, பிறகு விராட் கோலியுடன் இணைந்து 222 ரன்கள் குவித்தார். 270 பந்துகளில் 21 பவுண்டரிகளுடன் 153 ரன்கள் எடுத்தார்.
  • ராஞ்சி, 202 ரன்கள்: 2017-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் 202 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா 451 ரன்கள் எடுத்திருந்தபோதிலும், புஜாரா உறுதியாக நின்று 202 ரன்கள் குவித்தார். இந்த 525 பந்துகள் மிக நீண்ட, மாரத்தான் இன்னிங்ஸ். இந்திய அணி 603/9 டிக்ளேர் செய்தது, போட்டி டிராவில் முடிந்தது.
  • 2018 கோல்டன் ஆஸ்திரேலிய தொடர்: 2018 ஆஸ்திரேலிய தொடர் புஜாரா மீது கோலி-ரவிசாஸ்திரி கூட்டணிக்கு இருந்த ஐயத்தை கேள்விக்குட்படுத்துமாறு அமைந்தது. இதில் புஜாரா 3 சதங்களை அடித்தார். அடிலெய்டில் எடுத்த 123 மற்றும் 71 ரன்கள் அபாரமானது. 246 பந்துகளில் 123 ரன்கள் எடுத்ததால் இந்திய அணி 250 ரன்களைத் தொட்டது. 2வது இன்னிங்ஸிலும் 71 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 323 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
  • பெர்த் & சிட்னி டெஸ்ட்கள்: பெர்த் டெஸ்ட்டில் 106 ரன்கள் எடுத்தார். சிட்னியில் 622/7 என்ற அளவில் இந்திய அணி ஆடிய போது, புஜாரா 373 பந்துகளில் 193 ரன்களை விளாசினார். ரிஷப் பண்ட் 159 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் புஜாரா 3 சதங்கள் இந்திய வெற்றியில் பெரிய பங்களிப்பை நிகழ்த்தியது.
  • 2020-21 ஆஸ்திரேலியா தொடர்: விராட் கோலி தலைமையில் இந்திய அணி 36 ரன்களில் சுருண்டதும், ரஹானே கேப்டன்சியில் இந்தியா தொடரை வென்றது. புஜாரா சிறப்பாக பங்களித்து, சிட்னியில் 50 மற்றும் 77 ரன்கள் எடுத்தார். பிரிஸ்பன் டெஸ்டில் 1வது இன்னிங்ஸில் 50, 2வது இன்னிங்ஸில் 56 ரன்கள் எடுத்தார். இந்தியா தொடரில் 2-1 என்று வெற்றி பெற்றது.

சச்சின் டெண்டுல்கர் கூறியது போல, புஜாராவின் கோல்டன் சீரியஸ் என்றால் அது 2018 ஆஸ்திரேலியா தொடர்தான். அதியற்புதமான வீரரை எந்த வித சடங்கு சம்பிரதாயமுமின்றி புறக்கணித்து ஓய்வு பெற்றதனால், பிசிசிஐ மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Facebook Comments Box