இயக்குநர் ராஜமௌலி மற்றும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஆகியோருக்கு ஆஸ்கர் குழுவில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொழில்ரீதியாக அர்ப்பணிப்பு மற்றும் தகுதி வாய்ந்த பிரபலங்கள் பொதுவாக ஆஸ்கார் குழுவில் சேர அழைக்கப்படுவார்கள். அதற்காக, இந்த ஆண்டு புதிய உறுப்பினர்களாக சேர 57 நாடுகளைச் சேர்ந்த 487 பிரபலங்களை ஆஸ்கர் கமிட்டி அழைத்துள்ளது.
இயக்குனர் ராஜமௌலி மற்றும் அவரது மனைவியும் ஆடை வடிவமைப்பாளருமான ரமா ராஜமெளலி, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாத்து’ பாடல் நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித் மற்றும் பலர் உறுப்பினர்களாக சேர அழைக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post