டெல்லி மதுக்கொள்கை மீறல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் நீதிமன்ற அனுமதியின் பேரில் கெஜ்ரிவாலிடம் சிபிஐ 3 நாட்களாக விசாரணை நடத்தியது. சிபிஐ காவல் முடிந்ததும் கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, அவரை மேலும் 14 நாட்கள் காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணை முடிவில் கெஜ்ரிவாலை ஜூலை 12ம் தேதி நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Discussion about this post