பீகாருக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயற்குழு கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில், கட்சியின் செயல் தலைவராக ராஜ்யசபா உறுப்பினர் சஞ்சய் ஜா நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, பீகாருக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் நீடிப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பீகாரில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இதற்கு பாட்னா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என ஐக்கிய ஜனதா தள தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Discussion about this post