தடை செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு தொடர்பான விவகாரம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ஹிஜ்ப் உத்-தாகருடன் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சித்தயம்மாள் நகரில் இஸ்லாமிய தீவிரவாதி அகமது வீட்டிலும், மானங்கொறையில் உள்ள ஷேக் அலாவுதீன் வீட்டிலும். சாலியமங்கலத்தில் உள்ள அப்துல்ரகுமான், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஈரோட்டில் இரண்டு இடங்களில் அதிகாலையில் சோதனை நடத்தினர். ஈரோடு அசோக் நகர் ஆறாவது தெருவில் உள்ள சர்புதீன் என்பவரது வீட்டிலும், ஈரோடு பெரியார் நகரை சேர்ந்த முகமது இசாக் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மண்டையூர் வடகாடு கிராமத்தில் அப்துல் கான் என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post