தமிழகத்தில் டாஸ்மாக் வருவாயில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று சிஏஜி அறிக்கையை மேற்கோள் காட்டி தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தில் கிக் இல்லாததால், சிலர் போலி மதுபானங்களில் ஈடுபடுவதாகவும், மதுவின் தரத்தை சோதிக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசியதை சுட்டிக்காட்டினார். .
சென்னையில் சுகாதார உள்கட்டமைப்பு அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
சட்டப் பேரவையில் சுகாதாரப் பிரச்னைகள் குறித்து யாரும் விவாதிப்பதில்லை என்றும் அண்ணாமலை கூறினார்.
கடந்த 3 ஆண்டுகளில் முதல்வரின் வெளிநாட்டு பயணங்களால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று அண்ணாமலை விமர்சித்தார்.
Discussion about this post