வெங்கையா நாயுடு, உண்மையான நண்பர் என பிரதமர் மோடி புகழாரம்

0

நெருக்கடியின் போது பல்வேறு இன்னல்களை சந்தித்த முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அவர் உண்மையான நண்பர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாறு குறித்த 3 புத்தகங்களை வீடியோ மூலம் பிரதமர் மோடி வெளியிட்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது வெங்கையா நாயுடு 17 மாதங்கள் சிறையில் இருந்ததை நினைவு கூர்ந்தார்.

வாஜ்பாய் அரசில் இணைந்து பணியாற்றிய போது, ​​சேவைக்கு தான் அதிகாரம் என்பதை வெங்கையா நாயுடு நிரூபித்துள்ளார் என்று பிரதமர் மோடி பாராட்டினார்.

ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்காக வெங்கையா நாயுடு பாடுபட்டார் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here