பிஹாரில் 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம்: சங்கராச்சாரியார்

பிஹாரின் அனைத்து 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

பிஹாரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: “நாடு சுதந்திரம் அடைந்தபிறகு 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுகளாக பல வாக்குறுதிகள் இருந்தும் எந்த கட்சியும் பசு பாதுகாப்புக்கு உறுதியாக செயல்படவில்லை. பிஹாரின் சட்டப்பேரவைத் தேர்தலில் பசு பாதுகாப்புக்கும் சனாதன தர்மத்திற்கும் ஆதரவாக நாம் வாக்களிக்க வேண்டும்.

வரும் தேர்தலில், 243 தொகுதிகளுக்கும் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம். அவர்களின் பெயர்களை உடனே வெளியிட மாட்டோம், இல்லையெனில் அவர்களின் வேட்புமனு ரத்து செய்யப்படலாம். பசு பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் சுயேட்சை வேட்பாளர்களை 243 தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கிறோம். அவர்களுக்கு எனது ஆசிகள் கிடைக்கும். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வேட்பாளர் இருப்பதை உறுதி செய்வோம். அவர்கள் பசு பாதுகாப்பில் முழுமையாக செயல்படுவார்கள்.

பசுக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன. பல கட்சிகளை ஆட்சிக்கு கொண்டு வந்தும் இந்த திசையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பசு வதையை பாவமாக கருதும், உணர்வு வலியுள்ள இந்துக்களின் பாதுகாப்புக்காக பணியாற்றும் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தும் நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்தே வருகிறது. மத்திய அரசு இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பசுவதையில் ஈடுபடும் நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறும் அரசியல் கட்சிகளை நாங்கள் நம்பவில்லை.

தனது கட்சி பசு பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பதாக பிரதமர் கூறினாலும், நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிக்கிறது. இது மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் தொந்தரவு தரும் நிகழ்வாக உள்ளது.”

சங்கராச்சாரியார் பிஹாரில் பசு பாதுகாப்பு யாத்திரை நடத்த உள்ளதாக நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று இவரது இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அரசியல் வட்டாரங்கள் இதனால் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்று கருதுகின்றனர்.

Facebook Comments Box