TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கான கட் ஆஃப் இந்த முறை குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முறை கட் ஆஃப் மதிப்பெண்கள் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் மாற்றங்கள் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடைபெற்ற 10ம் வகுப்பு தகுதி குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதினர் என TNPSC தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.இதற்காகத்தான் நேற்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை கடந்த ஜூன் 9ஆம் தேதி நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6624 குரூப் 4 பணியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
TNPST குரூப் 4 தேர்வு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை முறையான அறிவிப்புகளுடன் நிரப்புகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணியிடங்களை நடத்துகிறது.
கடந்த சில நாட்களில் 6,244 காலி பணியிடங்களுக்கு 20 லட்சம் பேர் தேர்வெழுதினர். இந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், எழுத்தர்- 3 உள்ளிட்ட பல பணியிடங்கள் இருந்தன.
மதிப்பெண் விவரங்கள்; குரூப் 4 பணியிடங்களுக்கு நேர்காணல் இல்லை..அதாவது இந்த எழுத்துத் தேர்வில் உரிய கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஆவண சரிபார்ப்புக்குப் பிறகு பணியிடங்கள் ஒதுக்கப்படும். TNPSC இன்னும் கட் ஆஃப் மதிப்பெண்களை அறிவிக்கவில்லை. இதற்கிடையில் இந்த ஆண்டு கட் ஆஃப் மார்க் என்ன என்று பார்ப்போம்.
6,244 காலியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு மற்றும் நுண்ணறிவு பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இருக்கும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
கடினமான கேள்விகள்: இம்முறை கணிதத்தில் வழக்கத்தை விட 2 கேள்விகள் கூடுதலாக இருந்தன.
மேலும் பொது அறிவு கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தன. 10 கேள்விகள் வெவ்வேறு தரத்தில் இருந்தன. குரூப் 4 தேர்வு குரூப் 2 போலவே இருந்தாலும் சில கேள்விகள் குரூப் 1 போலவே கேட்கப்பட்டன. இந்த தேர்வு முன்பை விட கடுமையாக இருப்பதால் கட் ஆஃப் குறையும் வாய்ப்புகள் உள்ளன.
கட் ஆஃப் குறையுமா?: பொதுப் பிரிவினருக்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் 146-151 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், பொதுப் பிரிவில் பெண் விண்ணப்பதாரர்களுக்கான கட் ஆஃப் மார்க் 152 – 155 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) ஆண்கள் 143-147, பெண்கள் 146-150, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லீம் (பிசிஎம்) ஆண்கள் 142-145 மற்றும் பெண்களுக்கு 139-146 கட் ஆஃப் மதிப்பெண் எனக் கூறப்படுகிறது.
பொதுவாக இப்படித்தான் மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆனால் இந்த முறை கடந்த முறையை விட 2 மதிப்பெண்கள் குறைவாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post