மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்தி இந்து மதத்தை வன்முறையுடன் தொடர்புபடுத்தியதற்கு ஆர்எஸ்எஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்துக்களை வன்முறையுடன் தொடர்புபடுத்தினார்.
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் இந்து மதத்தை வன்முறையுடன் தொடர்புபடுத்துவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றார். விவேகானந்தரும், மகாத்மா காந்தியும் இந்து மதம் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் போதித்ததாகச் சொன்னார்கள். இந்து மதம் குறித்து ராகுல் காந்தி பேசியது தவறானது என்றும் சுனில் அம்பேகர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post