‘வேட்டுவம்’ படத்தின் கதைக்களம்: பா.ரஞ்சித் தகவல்

‘வேட்டுவம்’ படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும் என்று பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் ‘வேட்டுவம்’. இதன் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. முதன்முறையாக இப்படம் குறித்து பேட்டியில் பா.ரஞ்சித் பேசினார்.

அந்த பேட்டியில், பா.ரஞ்சித் கூறியதாவது:

“வேட்டுவம் கதையினை ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக்க வேண்டும் என்று தான் எழுதியேன். இதில் என்ன சொல்லப்போகிறோம் என்று யோசித்தேன். ஏன் இக்கதையினை சொல்ல வேண்டும் என்ற சில கேள்விகள் எழுந்தன. அந்தக் கதையில் அதிகார பகிர்வு முக்கியமாக இருந்தது.

ஆகையால், அந்த கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வேறொரு உலகில் அதை சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். அந்த உலகம் பார்வையாளர்களுக்கு புதிதாக இருக்கும். இது சயின்ஸ் பிக்சன் கலந்த எதிர்கால கதையாக இருக்கும். பார்வையாளர்கள் கொண்டாடக்கூடிய படமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box