புதிய உச்சத்தை எட்டிய வெள்ளி விலை: தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு
இன்று (செப்.26) சந்தையில் வெள்ளி விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் இன்று பவுனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை, சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பது, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறையுதல் போன்ற காரணங்களால் தங்க விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
கடந்த 23-ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுனுக்கு ரூ.85,120 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. செப்.24 மற்றும் 25-ஆம் தேதிகளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 மற்றும் ரூ.90 குறைந்தது. இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.10,550, கிராமுக்கு ரூ.40 உயர்வு. பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.84,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ரூ.92,072 மற்றும் 18 காரட் தங்கம் ரூ.69,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து ரூ.153-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ.1,53,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.