ரூ.13 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தம்பதி கைது
சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரில், மாவோயிஸ்ட் தம்பதிகளான ரவி ரமேஷ் (28) மற்றும் கமலா குர்சம் (27) ஆகியோரை பாதுகாப்புப் படையினர் செப்.23-ஆம் தேதி கைது செய்தனர். இவர்களைப் பற்றிய தகவல் வழங்குபவர்களுக்கு ரூ.13 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
கைது நேரத்தில் அவர்களுடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 10 கிராம் தங்க பிஸ்கட், ரூ.1.4 லட்சம் ரொக்கம், 2 ஆன்ட்ராய்டு போன்கள் மற்றும் மாவோயிஸ்ட் தொடர்பான துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், இவர்களும் மாவோயிஸ்ட் குழுக்களுக்கு மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கி வந்தது தெரியவந்தது.
Facebook Comments Box