கரூர் விபத்து குறித்து பரவிய சர்ச்சை பதிவு போலி: கயாடு லோஹர் விளக்கம்
கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய சர்ச்சை பதிவு உண்மையல்ல என நடிகை கயாடு லோஹர் விளக்கம் அளித்துள்ளார்.
“கரூர் விபத்தில் என் நண்பரை இழந்துவிட்டேன். தவெகவின் சுயநல அரசியலுக்காக எத்தனை உயிர்கள், விஜய்?” எனக் கூறியதாக அவரது பெயரில் ஒரு பதிவு வைரலானது. அதனுடன் புகைப்படங்களும் இணையத்தில் பரவின.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் கயாடு லோஹர்,
“என் பெயரில் பரவும் அந்த கணக்கு போலியானது. எனக்கும் அதனுடன் தொடர்பில்லை. அங்கு பகிரப்பட்ட கருத்துக்களும் என்னுடையவை அல்ல. கரூர் பேரணியில் நடந்த துயரமான சம்பவத்தால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரூரில் எனக்கு தனிப்பட்ட நண்பர்கள் யாரும் இல்லை. எனது பெயரில் பரப்பப்படும் அந்தக் கதை முற்றிலும் தவறானது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தயவு செய்து அந்த பொய்யான தகவலை நம்பவோ பகிரவோ வேண்டாம். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு என் பிரார்த்தனைகள் என்றும் தொடரும்,” எனக் கூறினார்.
‘டிராகன்’ திரைப்படத்தின் வெற்றியுடன் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கயாடு லோஹர். இவரது பெயரில் வெளியான போலி பதிவு சர்ச்சை ஏற்படுத்தியதால், உடனடியாக விளக்கம் அளித்துள்ளார்.