உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு: 2 மணி பயணம் 2 நிமிடத்தில்

சீனாவில் உலகின் மிக உயரமான பாலம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. இதனால், முன்னால் 2 மணி நேரம் எடுத்துக் கொண்ட பயணம் தற்போது வெறும் 2 நிமிடங்களில் முடிவடைகிறது. குய்சோ மாகாணத்தில் அமைந்த இந்த பாலத்திற்கு ஹுவாஜியாங் கிராண்ட் கன்யான் பாலம் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து 625 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இது, இரு மலைகளை இணைக்கும் அழகான மற்றும் சிறப்பான கட்டிடமாகும்.

இதற்கு முன்பு பெய்பான்ஜியாங் பகுதியில் 565 மீட்டர் உயரத்தில் அமைந்த பாலமே உலகின் மிக உயரமான பாலமாக இருந்தது. ஹுவாஜியாங் கிராண்ட் கன்யான் பாலம் 625 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு புதிய சாதனையை நிறுவியுள்ளது. 2,900 மீட்டர் நீளமான இந்த பாலம் 3 ஆண்டுகளில் கட்டப்பட்டது.

குய்சோ மாகாண போக்குவரத்து முதலீட்டு குழுமத்தின் திட்ட மேலாளர் வூ ஜாவோமிங் கூறியதாவது: “625 மீட்டர் உயரத்தில் அமைந்த இந்த பாலம் பொறியியலின் அற்புதமாகும். பொதுமக்களுக்கு பார்வை எடுக்க 207 மீட்டர் உயரத்தில் லிப்ட், மேலும் உணவகங்கள் மற்றும் பார்வை பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது விரைவில் பிரபலமான சுற்றுலாத்தலமாக மாறும்” என அவர் தெரிவித்தார்.

Facebook Comments Box