இந்தியாவுடன் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான அணிகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. காயம் காரணமாக கேப்டன் பேட் கம்மின்ஸ் இதில் பங்கேற்காத நிலையில், மிட்செல் மார்ஷ் ஒருநாள் அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்து, 3 ஒருநாள் போட்டிகளும் 5 டி20 போட்டிகளும் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் வரும் அக்டோபர் 19ஆம் தேதி தொடங்குகிறது. அண்மையில் பிசிசிஐ இந்திய அணியை அறிவித்ததைத் தொடர்ந்து, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் தனது அணியை அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2–1 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலிய அணி, இந்த முறை வெற்றியை நோக்கி தீவிர முயற்சியில் உள்ளது. காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் கம்மின்ஸுக்கு பதிலாக மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.
ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லீஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷாட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், நித்திஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.
இந்த தொடரில் இளம் வீரர் ஷுப்மன் கில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட ரோஹித் சர்மா, இந்த முறை பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட உள்ளார்.