நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை இன்று திறக்கிறார் பிரதமர் மோடி

நவி மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் மும்பை மெட்ரோ 3-ம் கட்ட திட்டம் இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

மகாராஷ்டிராவின் நவி மும்பையில் ரூ.19,650 கோடி செலவில், 1,160 ஹெக்டேர் பரப்பளவில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஆண்டுக்கு 2 கோடி பயணிகள் பயணம் மேற்கொள்ள முடியும். அடுத்த கட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டால், ஆண்டுக்கு 9 கோடி பயணிகள் பயணம் செய்ய முடியும். நவி மும்பை விமான நிலையம் முழுமையாக செயல்படுவது 2030-ம் ஆண்டில் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாம் கட்ட மும்பை மெட்ரோ திட்ட பணிகள் ரூ.12,200 கோடியில் மேற்கொள்ளப்பட்டு, ஆச்சார்யா அத்ரே சவுக் முதல் கபே பரேட் வரை புதிய மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெறும் போது பிரதமர் மோடி நவி மும்பை விமான நிலையம் முதல் முனையம் மற்றும் 3-வது கட்ட மெட்ரோ திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் இந்தியா வருகிறார். மும்பையில் முகாமிடும் அவர் நாளை காலை பிரதமர் மோடியை சந்திப்பார். அன்றைய தினம் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்தளிப்பார். பிற்பகலில் இரு நாடுகளின் தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் மும்பையில் நடைபெறும் பின்டெக் விழாயிலும் பங்கேற்கின்றனர்.

Facebook Comments Box