தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு தயாராகும் ரிஷப் பண்ட்
கிறிஸ் வோக்ஸ் பந்தை பாதத்தில் வாங்கி கடுமையான காயம் அடைந்த ரிஷப் பண்ட், தற்போது கடைசி கட்ட மறுசிகிச்சையில் இருக்கிறார். இந்த வார இறுதியில் உடற்தகுதி மதிப்பீட்டுக்கு தயாராக இருப்பார்.
இதையடுத்து, 2025-26 ரஞ்சி டிராபி சீசனின் 2வது பகுதியில் ரிஷப் பண்ட் ஆடுகிறார். ரஞ்சி போட்டிகள் அக்டோபர் 25-ம் தேதி தொடங்கும். அவர் நவம்பர் 14-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு திரும்பும் முன் இந்த போட்டிகளில் தன் திறமை மற்றும் உடற்தகுதியை பரிசோதிப்பார்.
அஜித் அகார்க்கர் இதை ரிஷப் பண்டுடன் ஏற்கெனவே பேசியுள்ளார். எனவே தென் ஆப்பிரிக்கா தொடருக்கு அவரது திரும்புதல் உறுதியாகியுள்ளது.
பண்ட் காலுக்கான கட்டுக்கள் நீக்கப்பட்டு, பாதத்தை நன்றாக இயக்க முடிகிறது. கால்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் உடல் எடை பயிற்சிகளை தற்போது எடுத்துக் கொண்டுள்ளார். அக்டோபர் 15-ம் தேதி டெல்லி அணி ரஞ்சி டிராபியில் ஆட தொடங்குகிறது. முதல் ஆட்டம் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஹைதராபாத்தில், 2வது ஆட்டம் ஹிமாச்சல் அணிக்கு எதிராக அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும்.
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 4வது டெஸ்டில் கிறிஸ் வோக்ஸ் ஃபுல்டாஸை ரிவர்ஸ் ஸ்விப் ஆட முயற்சிக்கும்போது பண்ட் காலில் கடும் காயம் அடைந்தார். கால எலும்பு முறிந்தது. ஆனாலும் கால் முடியாமல் போன நிலையில், ஜோப்ரா ஆர்ச்சரை மிட்விக்கெட்டில் அடித்த அவரது மெஜஸ்டிக் சிக்சர் ரசிகர்கள் மறக்க முடியாதது.
ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் ரிஷப் பண்ட் 4 டெஸ்ட் போட்டிகளில் 479 ரன்கள் செய்து, இங்கிலாந்தில் ஒரு விக்கெட் கீப்பர் அதிக ரன்கள் செய்த சாதனையை அடைந்தார். இதில் 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடித்தார்.
பண்ட் திரும்பியவுடன் டெல்லி அணியை முதலில் ரஞ்சி டிராபியில் வழிநடத்துவார். இப்போதைக்கு ஆயுஷ் பதோனி அணியை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.