ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை உயர்வு: ஒரு பவுன் ரூ.91,000 கடந்தது!

தங்கத்தின் விலை இன்று (அக்.8) இரண்டாவது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலில் பவுனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.91,080 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,480 உயர்ந்து அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரம், அமெரிக்கா வட்டி விகிதங்களைக் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு, அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இதனால் தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருகிறது.

சமீபத்தில், செப்.6-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.80,040 க்கு இருந்தது, செப்.23-ம் தேதி ரூ.85,120 க்கு உயர்ந்தது. அதன்பிறகு சில நாட்கள் இறங்கவும், சில நாட்கள் ஏறவும் இருந்த நிலையில், அக்.6-ம் தேதி பவுன் தங்கம் ரூ.89,000-ஐ தொட்டது. அக்.7-ம் தேதி ரூ.89,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று காலையில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்பட்டது. பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.90,400 ஆக உயர்ந்தது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.167, கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,67,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பிற்பகலில், தங்கம் மேலும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,385 ஆகவும், பவுனுக்கு ரூ.91,080 ஆகவும் உயர்ந்தது. வெள்ளியும் ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.170, ஒரு கிலோ ரூ.1,70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நவராத்திரி தொடங்கி தீபாவளி வரை பண்டிகை காலத்தில் தங்கம் விலை அடிக்கடி புதிய உச்சங்களை தொட்டுவந்துள்ளது. அக்.20 தீபாவளியை முன்னிட்டு நகை வாங்குவோர் மத்தியில் கலகம் அதிகரித்து உள்ளது.

தற்போதைய விலை நிலவரம்:

  • அக்.8 (புதன்) – பவுன்: ரூ.91,080 (பிற்பகல்), ரூ.90,400 (காலை)
  • அக்.7 (செவ்வாய்) – பவுன்: ரூ.89,600
  • அக்.6 (திங்கள்) – பவுன்: ரூ.89,000
Facebook Comments Box