ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆர்.ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,
ஆம்ஸ்ட்ராங் சமூக சேவையில் ஈடுபட்ட பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளார். சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் 2 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எரித்துக் கொல்லப்பட்டார். முன்னதாக அதிமுக பிரமுகர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை அரசின் தோல்வியையும், திமுக ஸ்டாலின் அரசின் தோல்வியையும் காட்டுகிறது என்றார்.
சட்டங்களை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரே இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டும் என்றார். இது சென்னையில் மட்டும் நடக்கிறது. இந்தக் கொலைக்கு தமிழக முதல்வர் முழுப்பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசு சட்டம் ஒழுங்கை ஒரு துளி கூட மதிப்பதில்லை. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றார்.