பாஜக தலைவர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மாநகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் தனபால் புகார் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் ஊர்வலமாக வந்து புகார் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தனபால், செல்வம் பற்றி பேசிய அண்ணாமலைக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து மக்களை மிரட்டுவதாக குற்றம்சாட்டினார்.