காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 20 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி மேலாண்மை குழுவின் 99வது கூட்டம் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தமிழக அரசு பிரதிநிதிகள், 40 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பான விவாதத்தின் முடிவில் வரும் 31ம் தேதி வரை தமிழகத்திற்கு தினமும் 1 டி.எம்.சி. மொத்த வீதம் 20 டி.எம்.சி. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது.
கூட்டத்தில் கர்நாடக அரசுப் பிரதிநிதிகள் கூறியதாவது: கர்நாடகாவில் உள்ள அணைகளில் மாநிலத் தேவைக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது எனவே தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது. ஆனால் அதிகாரிகள் அதை ஏற்காமல் தண்ணீர் திறக்க பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.