அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது.இதில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகியவை முக்கிய கட்சிகள். ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பிடன் களம் இறங்கியுள்ளார். அதேபோல் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பென்சில்வேனியாவில் உள்ள பட்லரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென டிரம்ப் மீது துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச்சூடு தாக்குதலில் டொனால்ட் டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, பணியில் இருந்த அதிகாரிகள் டிரம்பைச் சுற்றி பாதுகாப்புச் சுவர் அமைத்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொனால்ட் டிரம்ப் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கமலா ஹாரிஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கமலா ஹாரிஸ், பென்சில்வேனியாவில் முன்னாள் அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு குறித்து எனக்கு விளக்கமளிக்கப்பட்டது. டிரம்புக்கு பலத்த காயம் ஏற்படவில்லை என்பதை அறிந்து நானும், எனது கணவர் டக்கும் நிம்மதி அடைந்தோம். , அவரது குடும்பத்தினர் மற்றும் இந்த முட்டாள்தனமான துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள்.” பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரார்த்தனை செய்கிறோம்.
யுனைடெட் ஸ்டேட்ஸ் ரகசிய சேவை, முதல் பதிலளிப்பவர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் உடனடி நடவடிக்கைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இதுபோன்ற வன்முறைக்கு நம் நாட்டில் இடமில்லை. இந்த கொடூரமான செயலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும் மேலும் இது மேலும் வன்முறைக்கு வழிவகுக்காமல் தடுக்க நமது பங்களிப்பைச் செய்ய வேண்டும்.”
“நமது ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு முற்றிலும் இடமில்லை. என்ன நடந்தது என்று எங்களுக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை என்றாலும், முன்னாள் அதிபர் டிரம்ப் பலத்த காயம் அடையவில்லை என்று நாம் அனைவரும் ஆறுதல் கொள்ளலாம், மேலும் இந்த தருணத்தைப் பயன்படுத்தி நாகரீகத்திற்கும் மரியாதைக்கும் நம்மை மீண்டும் அர்ப்பணிக்க வேண்டும். அரசியல்” என்று பராக் ஒபாமா ஒரு பதிவில் எழுதினார். மிட்செலும் நானும் அவரை வாழ்த்துகிறோம்,” என்றார்.
பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.