காங்கிரஸ் ஆட்சியில், மாநில அரசுகளை 90 முறை கவிழ்க்கப்பட்டதாக… ஜே.பி.நட்டா

0

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை 90 முறை கவிழ்க்கப்பட்டதாக பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜேபி நட்டா குற்றம் சாட்டினார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற மாநில பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படுவதற்கு முன்பு தற்காலிகமானது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று அரசியல் சாசனம் கூறுகிறது என்றும், ஆனால் ஆந்திராவில் மட்டும் நான்கு முறை மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சி செய்ததாகவும் நட்டா குற்றம் சாட்டினார்.

நாட்டில் 1,500க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தும், அவற்றில் ஒன்றில் கூட உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று கூறிய அவர், தேசிய நலனை கருத்தில் கொண்டு செயல்படுவது பாஜக மட்டுமே என்றும் பெருமையுடன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here