மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அசாம் முதல்வர் ஹிமந்தா விஷ்வ சர்மா சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அஸ்ஸாம் ஹைட்ரோ கார்பன் தொழிற்சாலைகளின் ராயல்டி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
மேலும், மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, இளைஞர் மேம்பாடு, பெண்கள் மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அசாம் முதல்வர் ஹிமந்தா விஸ்வ சர்மா X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.