தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது:கடந்த, 10 ஆண்டுகளில், வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டதைக் குறிக்கும் வகையில் 1860 ஜூலை 24 அன்று வருமான வரி தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் வருமான வரி தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சிறப்பாகப் பணியாற்றியவர்களை கவுரவித்தார்.
விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
“இந்தியாவில் வருமான வரித்துறையின் பங்கு மிகச் சிறப்பாக உள்ளது. மேலும், ”வருமான வரித்துறையில் பல அதிகாரிகள் நேர்மையாகவும், திறமையாகவும் பணியாற்றி வருகின்றனர்,” என பாராட்டினார்.