நாடு முழுவதும் வரும் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைவரது வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் வரும் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2 ஆண்டுகளாக வீடு வீடாக மூவர்ணக் கொடியை ஏற்றும் நிகழ்வு தேசிய இயக்கமாக மாறியுள்ளது. ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் அடிப்படை ஒற்றுமையை எழுப்பியுள்ளது.
இந்த இயக்கத்தை வலுப்படுத்த அனைத்து குடிமக்களையும் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் அதே ஆர்வத்துடன் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
எங்கள் பெருமையை, எங்கள் மூவர்ணக் கொடியை உங்கள் இல்லங்களில் ஏற்றுங்கள். மூவர்ணக் கொடியுடன் செல்ஃபி எடுத்து அதை ஹர்கர்திரங்கா இணையதளத்தில் https://harghartiranga.com இல் பதிவேற்றவும்.
இதன்படி, வரும் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைவரும் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும். செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.