வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி நடந்த போராட்டத்தில் 100 பேர் உயிரிழந்தனர்.
வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். நாட்டின் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, இடஒதுக்கீட்டை 5 சதவீதமாகக் குறைத்ததை அடுத்து, போராட்டம் கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி நாடு முழுவதும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வன்முறை வெடித்ததை அடுத்து, போலீசார் தடியடி நடத்தினர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இந்த வன்முறையில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சில்ஹெட் நகரில் தங்கியுள்ள இந்தியர்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Discussion about this post