டெல்லி மதுபானக் கொள்கை மீறல் வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், இந்த வழக்கில் ஜாமீன் கோரி கீழ் நீதிமன்றத்தை கெஜ்ரிவால் அணுகலாம் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி மதுக் கொள்கை முறைகேடு புகாரில் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.