மேற்கு வங்கத்தில் காட்டாட்சி நடக்கிறது. மம்தா பானர்ஜி இரக்கமற்றவராகிவிட்டார்… அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

0

பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகரீகமான இந்தியாவின் முகத்தில் ஒரு கறை என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி மருத்துவர் (முதுகலை மருத்துவ மாணவி) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சஞ்சய் ராயை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் மேற்கு வங்க அரசு மீது மத்திய அமைச்சரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகரீகமான இந்தியாவின் முகத்தில் ஒரு கறை. இதுபோன்ற சம்பவம் நடந்து போராட்டம் நடத்தியவர்கள் தாக்கப்பட்டதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி வெட்கப்பட வேண்டும்.

மேற்கு வங்கத்தில் காட்டாட்சி நடக்கிறது. மம்தா பானர்ஜி இரக்கமற்றவராகிவிட்டார். இந்நிலை மாறி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here